நவராத்திரி பாடல்கள் Navarathri Songs
லலிதா நவரத்தின மாலை பாடல் வாழ்வில் வளம் தரும் லலிதா நவரத்தின மாலை பாடலையும் அதன் பொருளையும் விரிவாக அறிந்து கொள்ளலாம். காப்பு ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம் பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால் சேர்க்கும் நவரத்தின மாலையினைக் காக்கும் கணநாயக வாரணமே ஐந்து அறங்களையும் கடைமையாக செய்பவளும் , நலத்தினை தன் புன்னகையால் பேணுபவளுமாகிய புவனேஸ்வரி அன்னையின் மீது பாடப்படுவது இந்த நவரத்தின மாலை நூல். இந்த நூல் நன்கு அமைய கணங்களின் நாயகனாகிய கணபதி காக்க வேண்டும். மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே 1. வைரம் கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கன வானதவம் பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம் பெரும் பிழையேன் பேசத்தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே வற்றாத அருட்சுனையே வருவாய் மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே கற்க வேண்டிய நூல்கள் பலவற்றை பிழையில்லாமல் கற்றவர்கள் தெளிவு பெறவில்லை. உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று கண்மூடி தவத்தினைச் செய்வதே கதி என்...