திருப்புகழில் விநாயகர் பாடல்


திருப்புகழ் 1 கைத்தல நிறைகனி  (வயலூர்)


கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
  கப்பிய கரிமுக ...... னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ

     கற்பக மெனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்

     மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை

     மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
     முற்பட எழுதிய ...... முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
     அச்சது பொடிசெய்த ...... அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
     அப்புன மதனிடை ...... இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
     அக்கண மணமருள் ...... பெருமாளே.


யானை முகத்தை உடையவனும், கல்வி வளம் நிறைந்த அறிஞர்களின் புத்தியில் இருப்பவனும், ஊமத்தம் பூ, பிறைச்சந்திரன் ஆகியவற்றை தலையில் அணிந்த சிவபெருமானின் மகனும், மற்போருக்குத் தக்க திரண்ட தோள்களை உடையவனும், மதயானையைப் போன்ற பலசாலியும், மத்தளம் போன்ற வயிற்றினை உடையவனும், உத்தமியாகிய உமையவளின் மகனுமாகிய கணபதியே உன்னை நறுமணம் வீசும் மலர்களைக் கொண்டு நான் வணங்குகிறேன்.
முத்தமிழை எல்லாம் பழைமையான மேரு மலையில் முதலில் எழுதியவனும், திரிபுரங்களை எரிக்கச் சென்ற சிவபெருமானின் ரதத்தின் அச்சினை பொடியாக்கிய வீரனும், வள்ளியின் மீதுள்ள காதலால் துயரமுற்ற முருகப்பெருமானின் கவலையைப் போக்க தினைப்புலத்தில் யானையாகத் தோன்றி அந்தக் குறமகளான வள்ளியை தனக்கு இளையவனாகிய முருகப்பெருமானுக்கு மணம்புரியச் செய்தவனும் ஆகிய விநாயகப் பெருமானே உன்னை கற்பகமே என அழைத்தால் விரைவில் வினைகள் யாவும் ஓடிப்போகும். இப்பெருமைகள் நிறைந்த உன்னை கைநிறையப் பழங்கள், அப்பம், அவல், பொரி ஆகியவற்றை படையலிட்டு வழிபாடு செய்கிறேன்.



திருப்புகழ் 2 பக்கரை விசித்ரமணி  (விநாயகர்)
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
  பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்

பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய

     பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்

திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு

     சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்

செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
     செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
     எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
     ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
     விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
     வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.

 கரும்புஅவரைநல்ல பழ வகைகள்சர்க்கரைபருப்புநெய்எள்பொரிஅவல்துவரைஇளநீர்,  தேன்பயறு,(கொழுக்கட்டை) அப்ப வகைகள்பச்சரிசிபிட்டுவெள்ளரிப்பழம்இடித்துச் செய்யும்படியான பலவகைச் சிற்றுண்டிகள், (மதுரத்தினால்) நிகரற்ற கிழங்குகள்மிகுந்த அன்னம்கடலைஇவை முதலான (சத்துவகுண) ஆகாரங்களை உணவாகக் கொள்ளுகின்றவரும்ஒப்பற்றவரும்விக்கினங்களை ஆக்கவும்நீக்கவும் வல்லவருமான கருணையங்கடலே!

     கயிலாயமலையில் வசிப்பவரும்வளவான சடா மகுடத்தை யுடையவரும், (ஒருவராலும் எடுக்க முடியாத மகாமேரு கிரியாகிய) வில்லையுடையவரும்பெரிய பொருளும்உலகங்களுக்கெல்லாம் தந்தையுமாகிய சிவபெருமானருளிய ஞானவடிவினரே!

     ஒற்றைக் கொம்பையுடைய பெருமையில் சிறந்தவரே!

         அங்கவடியை யுடையதும்விசித்திரமானதும் ரத்தினங்களைப் பதிய வைத்துள்ளதுமான பொன்னாலாகிய சேணத்தையிட்டு அலங்கரிக்கப்பட்டதும்வேகமான நடையுடையதும்உக்கிரம் பொருந்தியதுமாகிய பட்சியென்று சொல்லும்படியான (குதிரையையும்) மயில் வாகனத்தையும், (இலக்கத்தொன்பன் வீரர்களையும் மாயையால் மயக்கிய) கிரவுஞ்ச மலையை அடியோடு (அதன் மாயையும்) பிளந்தழியுமாறு விட்டருளிய (ஞான சக்தியாகிய) வடிவேலாயுதத்தையும்அட்டதிக்குகளும் மதிக்குமாறு கெம்பீரமாகப் பறந்து வருகின்ற குக்குடதுவசத்தையும்எல்லா உலகங்களுக்கும் உயிர்களுக்கும் காவலாக இருந்து திருவருள்பாலிக்கும் சிறியத் திருவடியையும் வல்லபத்தில் முதிர்ந்த பன்னிரு புயாசலங்களையும் வயலூர் என்னும் புனித திருத்தலத்தையும்அமைத்து (அருள்நாத வொலியால்) உயர்ந்த திருப்புகழை (உலகம் உய்யுமாறு) சொல்லக் கடவாயென அடியேனுக்குத் திருவருள் புரிந்த அருள்நெறித் தொண்டை ஒரு காலத்தும் மறக்க மாட்டேன்.



திருப்புகழ் 3 உம்பர் தரு  (விநாயகர்)


உம்பர்தருத் தேநுமணிக் ...... கசிவாகி
    ஒண்கடலிற் றேனமுதத் ...... துணர்வூறி

இன்பரசத் தேபருகிப் ...... பலகாலும்

     என்றனுயிர்க் காதரவுற் ...... றருள்வாயே

தம்பிதனக் காகவனத் ...... தணைவோனே

     தந்தைவலத் தாலருள்கைக் ...... கனியோனே

அன்பர்தமக் கானநிலைப் ...... பொருளோனே
     ஐந்துகரத் தானைமுகப் ...... பெருமாளே.

    தம்பியாகிய முருகவேள் பொருட்டாகக் கானகத்தில் யானை வடிவம் கொண்டு சென்றவரே!

 தந்தையாராகிய சிவபெருமானை வலம் செய்ததனால் வழங்கிய கரத்தில் ஏந்திய கனியை உடையவரே!

         அன்புடையோர்களுக்கு உரிமையான நிலைத்த  பரம் பொருளாக விளங்குபவரே!

              ஐந்து திருக்கரங்களையும் யானை முகத்தையும் கொண்ட பெருமையின் மிகுந்தவரே! 

         விண்ணுலகிலுள்ள கற்பக மரம் போலவும்காமதேனுவைப் போலவும்சிந்தாமணியைப் போலவும்என் மனமானது கசிந்து அன்பு உடையதாகியும்ஒளிபெற்ற பாற்கடலில் பிறந்த இனிய அமுதம்போன்ற ஞான உணர்ச்சி என் உள்ளத்தில் ஊற்றெடுத்தும்சிவபோகமாகிய பேரின்ப வெள்ளத்தை அடியேன் பலகாலும் பருகியும் மகிழுமாறு அடியேனுடைய உயிருக்கு ஆதரவு வைத்து திருவருள் புரிவீராக.






திருப்புகழ் 4 நினது திருவடி  (விநாயகர்)
நினது திருவடி சத்திம யிற்கொடி
 நினைவு கருதிடு புத்திகொ டுத்திட

          நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு ...... நிகழ்பால்தேன்

நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம்

     நிறவில் அரிசிப ருப்பவல் எட்பொரி

          நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் ...... இளநீரும்

மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு

     மகர சலநிதி வைத்தது திக்கர
          வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ...... லமாக
மருவு மலர்புனை தொத்திர சொற்கொடு
     வளர்கை குழைபிடி தொப்பண குட்டொடு
          வனச பரிபுர பொற்பத அர்ச்சனை ...... மறவேனே
தெனன தெனதென தெத்தென னப்பல
     சிறிய அறுபத மொய்த்துதி ரப்புனல்
          திரளும் உறுசதை பித்தநி ணக்குடல் ...... செறிமூளை
செரும உதரநி ரப்புசெ ருக்குடல்
     நிரைய அரவநி றைத்தக ளத்திடை
          திமித திமிதிமி மத்தளி டக்கைகள் ...... செகசேசே
எனவெ துகுதுகு துத்தென ஒத்துகள்
     துடிகள் இடிமிக ஒத்துமு ழக்கிட
          டிமுட டிமுடிமு டிட்டிமெ னத்தவில் ...... எழுமோசை
இகலி அலகைகள் கைப்பறை கொட்டிட
     இரண பயிரவி சுற்றுந டித்திட
          எதிரு நிசிசர ரைப்பெலி யிட்டருள் ...... பெருமாளே.

         “தெனன தென தென தெத்தெனன” என்று ஒலிக்கின்ற சிறிய ஈக்கள் பல மொய்க்கின்ற உதிரம்திரண்டுள்ள சதைபித்த நிறைந்த குடல்நெருங்கிய மூளைநிரம்பிய வயிற்றில் நிறைந்த பெருங்குடல்பெரிய சத்தம் இவைகள் நிறைந்த போர்க்களத்தில்திமித திமிதிமி என்று மத்தளம் ஒலிக்கவும்இடக்கை என்ற வாத்தியம் செக சே சே என்று ஒலிக்கவும்ஒத்து என்ற ஊது குழல் துகு துகு துத்தென்று ஒலிக்கவும்இடியைப்போல் உடுக்கை ஒலிக்கவும்தவில் என்ற வாத்தியம் டிமுட டிமு டிமு டிட்டி என்று ஒலிக்கவும்மாறுபட்ட பேய்கள் கைப்பறை கொட்டியாடவும்இரணபயிரவிச் சுற்றி நடிக்கவும்எதிர்த்துப் போரிட்ட அவுணர்களைக் கொன்ற பெருமிதமுடைய முருகக் கடவுளே!

     தேவரீருடையத் திருவடியையும்வேலையும்மயிலையும்சேவலையும் நினைந்து ஒழியாது தியானிக்கின்ற அறிவை விநாயகரிடம் பெறும் பொருட்டுநிறைய அமுதுமாவாழைபலா என்ற முப்பழங்கள்அப்பம்பால்தேன்நீண்டுவளைந்த முறுக்குகரும்புஇலட்டுஒளிநிறைந்த அரிசிபருப்புஎள்பொரிஒப்பில்லாத இனிய பழ வகைகள்இளநீர் என்ற இவைகளை மன மகிழ்ச்சியுடன் தொட்டு உண்ணுகின்ற திருக்கரத்தையும்ஒப்பற்ற மகராலயமாகியக் கடலைத் தொட்டு உண்ட தும்பிகையையும் உடைய பெருமை வளர்கின்ற யானை முகமும் ஒற்றைக் கொம்பும் உடைய விநாயகமூர்த்தியை வலஞ் செய்துஅவருக்கென்று உரிய மலர்களைத் தூவிஉயர்ந்த சொற்களால் துதி செய்துகரங்களைத் தூக்கி குழைக் காதுகளைப் பற்றித் தோப்புக் கரணம் போட்டு சிரசில் குட்டிக்கொண்டுஅவருடைய பரிபுரம் அணிந்த தாமரைமலர் போன்ற திருவடிகளின் அர்ச்சனையை மறக்கமாட்டேன்.



திருப்புகழ் 5 விடமடைசு வேலை  (விநாயகர்)
விடமடைசு வேலை அமரர்படை சூலம்
     விசையன்விடு பாண ...... மெனவேதான்



விழியுமதி பார விதமுமுடை மாதர்

     வினையின்விளை வேதும் ...... அறியாதே



கடியுலவு பாயல் பகலிரவெ னாது
     கலவிதனில் மூழ்கி ...... வறிதாய

கயவனறி வீனன் இவனுமுயர் நீடு
     கழலிணைகள் சேர ...... அருள்வாயே

இடையர்சிறு பாலை திருடிகொடு போக
     இறைவன்மகள் வாய்மை ...... அறியாதே

இதயமிக வாடி யுடையபிளை நாத
     கணபதியெ னாம ...... முறைகூற

அடையலவர் ஆவி வெருவஅடி கூர
     அசலுமறி யாமல் ...... அவரோட

அகல்வதென டாசொல் எனவுமுடி சாட
     அறிவருளும் ஆனை ...... முகவோனே.

        உக்ரசேன மன்னனுடைய புதல்வியாகிய தேவகி தேவி நிகழ இருக்கும் உண்மையை உணராமல் உள்ளம் மிகவும் வருந்தி “பிள்ளைப் பெருமானே! கணபதியே” என்று அவர் திருநாமங்களைக் கூறித் துதி செய்து முறையிட்டதனால் கண்ணபிரானுக்கு யாதவர்களுடையச் சிறிய அளவுள்ள பாலைத் திருடிக்கொண்டு போகவும்பகைவர்களுடைய உயிரை பயப்படச் செய்யவும்சிலர் அவருடையத் திருவடியை விரும்பவும்பிறர் அறியாமல் அப் பகைவர்கள் அஞ்சி ஓடவும்அவ்வாறு ஓடுகின்ற அவர்களைக் கண்டு, “எங்கே போகிறீர்கள்சொல்லுக” என்று கூறி அவர்கள் தலையைத் தகர்க்கவும்அறிவை அருளுகின்ற ஆனைமுகக் கடவுளே!

 நஞ்சுடன் கூடிய கடலையும்தேவர் ஆயுதத்தையும்சூலத்தையும்அர்ச்சுனன் பாணத்தையும் ஒத்த கண்களும் மிகுந்த கனமுள்ள தனங்களும் உடைய விலைமகளிரின் சாகசத் தொழிலால் விளைவதை ஒன்றும் அறியாதவனாகி வாசனை மிக்க படுக்கையின்மீது பகல் இரவு என்னாதபடி போகத்தில் மூழ்கி ஏழ்மையடைந்த கீழ் மகனும் அறிவற்றவனும் ஆகிய அடியேன் உயர்ந்து நீண்ட உமது சரணாரவிந்தங்களில் சேர அருள் புரிவீர்.

Comments

Popular posts from this blog

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!

விநாயகர் அகவல் (Vinayagar Agaval)

சகல தோஷங்களை நீக்கி சந்தோஷம் தரும் குமாரஸ்தவம்