Posts

Showing posts from August, 2019

குழந்தைக்கு நல்ல படிப்பும் அறிவும் வாழ்வும் அமைய

Image
  வினைகள் தீர்க்கும் விநாயகர் ஒரு முறை ஒரு குழந்தைக்கு நல்ல படிப்பும் அறிவும் வாழ்வும் அமைய வாழ்த்த வேண்டும் என்று பெரியவரைக் கேட்டுக் கொண்டார்கள். பெரியவர் ” ஔவையார் சொன்ன பாலும் தெளிதேனும் பாட்டு தெரியுமா ? !” என்று கேட்டார். குழந்தையோ தெரியாது என்று சொல்ல ,” அது ரொம்ப சுலபம்!” என்று சொல்லிக் காட்டினார். “அதைச் சொன்னால் விநாயகனே குருவாய் இருந்து கல்வியில் பலப்பல முன்னேற்றம்தருவான்! அது போக நல்ல ஆசிரியனை உங்களைத் தேடி வரச் செய்வான்!மேலும் நற்கல்வி கிடைக்கும் இடத்திற்குச் செல்லச் செய்வான்!” என்றார்.

விநாயகர் அகவல் (Vinayagar Agaval)

Image
விநாயகர் அகவல் விநாயகர் அகவல் , இறைஞானம் அடைந்து முக்தி பெறும் ஆன்மீக வழியை முழுமையாகவும் படிப்படியாகவும் எழுபத்திரண்டே வரிகளில் மிக அழகாகப் பாடப்பெற்ற ஈடு இணையற்ற அற்புத நூல். இதன் ஆசிரியர் ஔவையார். இதனைத் தினமும் பாராயணம் செய்பவர்கள் , விநாயகர் அருளால் ஆத்மஞானம் பெற்று , இம்மையில் வாழ்க்கை அனுபவத்தரம் உயரப்பெறுவதோடு மறுமையில் திருக்கயிலாயமும் அடையப்பெறுவர் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை. விநாயகர் அகவல் தோன்றிய விதம் ஒரு முறை சுந்தரரும் , அவரது நண்பரான சேரமான் பெருமானும் திருகயிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் வேண்டி கையிலையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வழியில் விநாயகர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த அவ்வை மூதாட்டியைக் கண்டனர். அப்போது அவ்வை அவர்களிடம் “நீங்கள் எங்கு செல்கிறீர்கள் ?” என்று கேட்டார். அவ்வையிடம் அவர்கள் இருவரும் “நாங்கள் கையிலாயத்தில் சிவபெருமானின் தரிசனம் பெற போய் கொண்டிருக்கிறோம்.” என்றனர்.   அதனைக் கேட்ட அவ்வைப் பாட்டிக்கும் சிவபெருமானின் கையிலாய தரிசனத்தைக் காணும் எண்ணம் ஏற்பட்டது. அதனால் வழிபாட்டினை அவசரமாக முடிக்கத் தயாரானார் அவ்வையார். அவ்வைய...